இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளைஞன் பலி, மேலும் இருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளைஞன் பலி, மேலும் இருவர் படுகாயம்...

மாந்தை மேற்கு அடம்பன் - உயிலங்குளம் பிரதான வீதியில் நேற்று (21) மாலை 5 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் பொதுமக்களால் மீட்க்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது, அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது குறித்த இரண்டு மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியது.

இதன்போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏனைய இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரும் 

உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த அடம்பன் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு