17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து!! -சோகத்தில் முடிந்த வீட்டு பார்ட்டி-

ஆசிரியர் - Editor II
17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து!! -சோகத்தில் முடிந்த வீட்டு பார்ட்டி-

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் நடந்த விருந்து நிகழ்வில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் ஆர்ம்லி பகுதியின் சாலிஸ்பரி க்ரோவ் பகுதியில் உள்ள விருந்து நிகழ்வு நடைபெற்ற வீட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாக யார்க்ஷயர் நோயாளர் காவு வண்டிச் சேவை அறிவித்ததை தொடர்ந்து, அதிகாலை 2.48 மணியளவில் மேற்கு யார்க்ஷயர் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

குறித்த வீட்டில் ஏராளமானோர் இருந்ததைக் கண்ட அதிகாரிகள், அவர்களை உடனடியாக வெளியேறும் படி அறிவுறுத்தினார்கள். கத்தி குத்தால் பலத்த காயமடைந்த 17 வயது டீன் ஏஜ் சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்கு யார்க்ஷயர் காவல்துறை கொலை மற்றும் முக்கிய விசாரணைக் குழுவின் துப்பறியும் நபர்கள் சிறுவனின் மரணத்தை கொலையாக கருதி விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு