ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழா

ஆசிரியர் - Editor III
ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழா

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழா உப்புமாவளி  அளம்பில் முல்லைத்தீவில் இன்று வெகுவிமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. 

ஜீவ ஊற்று அன்பின் காரணமானது மக்களோடு மக்களாக மக்களுக்காகவே கடந்த எட்டு வருடங்களாக பல சமூக சேவைகளை நாடளாவிய ரீதியில் செய்து வருகிறது.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவர் தயாளினி ஜோன் உட்பட உபதலைவர் சிவசீலன் செயலாளர் பிரவீன் பொருளாளர் ஜெஸ்மன் மாவட்ட தலைவர்களாக திருகோணமலை மாவட்டத்திற்கு  அலெக்ஸ் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு யோசுவா ,சஞ்சீவன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு திலீப், சங்கரசாயி வவுனியா மாவட்டத்திற்கு சுந்தர் ,ராஜன் மற்றும் ஜீவ ஊற்று புலம்பெயர் தேசத்தின் நிர்வாக உறுப்பினர்  ரூபா செல்வா ஆகியோரும் உள்ளனர்.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைமை அலுவலக திறப்புவிழாவில் மக்கள் நல்வாழ்வு மையம் உறுப்பினர் சுந்தர செல்வன்  உடுப்பு குளம் கிராம அபிவிருத்தி சங்கம் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு