5 ஆயிரம் ரூபாய் போலி நாணய தாள்கள் 700 உடன் சந்தேகநபர் கைது! அச்சிட பயன்படுத்திய உபகரணங்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
5 ஆயிரம் ரூபாய் போலி நாணய தாள்கள் 700 உடன் சந்தேகநபர் கைது! அச்சிட பயன்படுத்திய உபகரணங்களும் மீட்பு..

போலி நாணய தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபரிடம் பணம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு