யாழ்.மானிப்பாய் - கட்டுடை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கொழுத்தி விசமிகள் அட்டகாசம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் - கட்டுடை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கொழுத்தி விசமிகள் அட்டகாசம்!

யாழ்.மானிப்பாய் - கட்டுடைப் பகுதியில் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி விசமிகளால் தீவைத்துக் கொழுத்தப்பட்டிருக்கின்றது.இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்தவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இருப்பினும் முச்சக்கர வண்டி பகுதி அளவில் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. கந்தசாமி ஜெகரூபன் என்பவரது முச்சக்கர வண்டியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு