டுபாய் சர்வதேச பாரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு பாரா அணிக்கு நான்கு பதக்கங்கள்

ஆசிரியர் - Editor II
டுபாய் சர்வதேச பாரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு பாரா அணிக்கு நான்கு பதக்கங்கள்

டுபாயில் நடைபெற்ற 14 ஆவது துபாய் குரோன் பிறீ மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட இலங்கை பாரா அணி வீரர்கள் 4 பதக்கங்களை வென்றனர்.

இதன்படி, 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் நான்கு பதக்கங்களை இந்தப் போட்டித் தொடரில் பங்குகொண்ட நான்கு வீரர்களும் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான 400 மீட்ட ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மதுரங்க சுபசிங்கவும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அனில் பிரசன்னவும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

இதனிடையே, ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் இலங்கை சார்பில் களமிறங்கிய நுவன் இந்திக வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல, ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பிரதீப் சோமசிறி வெண்கலப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு