விக்கெட் வேட்டையில் யாழ் வியாஸ்காந்த் - விதுசன்

ஆசிரியர் - Editor II
விக்கெட் வேட்டையில் யாழ் வியாஸ்காந்த் - விதுசன்

இலங்கை கிரிக்கெட் சபை (எஸ்.எல்.சி) ஏற்ப்படு செய்த 23 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்கான முன்னணி கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த போட்டிகளில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தமது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இதில் தமிழ் யூனியன் மற்றும் என்.சி.சி அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சுழல் பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இரண்டாவது இன்னிங்ஸில் 5 இலக்குகளை கைப்பற்றியிருந்தார். 

அதேவேளை, என்.சி.சி மற்றும் தமிழ் யூனியன் அணிகள் இடையிலான போட்டி சமநிலை அடைந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் வெற்றியினை தமிழ் யூனியன் அணி பதிவு செய்தது.

இதேநேரம், சோனகர் கிரிக்கெட் கழகத்திற்காக ஆடும் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு சுழல்வீரரான தீஷன் விதுசன் புளூம்பீல்ட் அணிக்கு எதிராக 7 இலக்குகளை கைப்பற்றியிருந்தார். இதனால் புளூம்பீல்ட் அணி 69 ஓட்டங்களுடன் சுருண்டது. 

இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று புதன்கிழமை தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு