ஓ.பி.எஸ் தாயார் உயிரிழந்தார்

ஆசிரியர் - Editor II
ஓ.பி.எஸ் தாயார் உயிரிழந்தார்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22 ஆம் திகதி அவர் தேனி நட்டாத்தி நாடார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வைத்தியர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை வழங்கினர்.

இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஓ.பி.எஸ் தாயார் மறைவுக்கு டி.டி.வி தினகரன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு