இளைஞரை ஏமாற்றி ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது

ஆசிரியர் - Editor II
இளைஞரை ஏமாற்றி ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு முறைப்பாட்டை பதிவு செய்தார்.

குறித்த முறைப்பாட்டில் வெப் சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தருவதாக பெண் இயக்குனர் ஒருவர் கூறினார். அவரை நம்பி நானும் நடிக்க சென்றேன். இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டேன். 

அதன்பின் படப்பிடிப்புக்கு வருமாறு என்னை அழைத்தனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த படப்பிடிப்புக்கு நானும் சென்றேன். அங்கு சென்ற பின்னர் தான் அவர்கள் எடுக்கும் படம் ஆபாச படம் என தெரியவந்தது. இதனால் நான் நடிக்க மாட்டேன் எனக்கூறினேன். 

இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள் என்னை மிரட்டினர். படத்தின் பெண் இயக்குனரும் படத்தில் நடிக்காவிட்டால் அதற்காக நான் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கூறினார். 

இதன்காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதோடு என் குடும்பத்தினரும் என்னை ஒதுக்கிவிட்டனர். இதற்கு காரணமாக பெண் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 

இதுபோல இன்னொரு பெண்ணும், அதே பெண் இயக்குனர் மீது முறைப்பாடு கூறியிருந்தார். இதையடுத்து அந்த பெண் இயக்குனர் லட்சுமி தீப்தா மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். பெண் இயக்குனர் லட்சுமி தீப்தாவை பொலிஸார் தேடி வந்த நிலையில் திருவனந்தபுரம் பொலிஸார் கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடத்திய பின்பு பொலிஸார் அவரை நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் இயக்குனர் லட்சுமி தீப்தாவுக்கு நிபந்தனை பிணை வழங்கியது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு