உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார்!! -மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன் தற்கொலை-

ஆசிரியர் - Editor II
உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார்!! -மனைவியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன் தற்கொலை-

இந்தியாவின் கர்நாடக மாநிலம் மகாதேஸ்வரா மலையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாநிலம் மகாதேஸ்வரா மலை பகுதியைச் சேர்ந்த முனிராஜு என்பவரின் மனைவி லட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று நாகமலையில் வேறு நபருடன் அவர் வசித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்திருந்த முனிராஜு, தனது மனைவியை நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது அவரை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின் மனைவியின் ரத்தம் வடியும் சடலத்தை வீடியோ எடுத்த அவர், உன்னை கொல்ல கடவுள் என்னை அனுப்பினார், என் லட்சுமியை நானே கொன்றேன். அவள் போய்விட்டாள் என்று கூறியுள்ளார்.

மனைவியை மடியில் வைத்துக் கொண்டு அவர் அழும் காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட முனிராஜு, சம்பவ இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு