பெண் ஆசிரியரை குத்தி கொலை செய்த மாணவன்!! -பாடசாலையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்-

ஆசிரியர் - Editor II
பெண் ஆசிரியரை குத்தி கொலை செய்த மாணவன்!! -பாடசாலையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்-

பிரான்ஸில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன், ஸ்பானிய மொழி ஆசிரியர் ஒருவரை திடீரென்று கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் தென்மேற்கு பகுதியான செயிண்ட்-ஜீன்-டி-லூஸ் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 53 வயதான அந்த ஆசிரியருக்கு உடனடியாக அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதும் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது ஸ்பானிய மொழி பாடம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது தான் 16 வயதான அந்த மாணவன் ஆசிரியர் மீது கத்தியுடன் பாய்ந்துள்ளான். குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவர்கள் பொலிசாரிடம் தெரிவிக்கையில், அந்த மாணவன் சாத்தானால் தூண்டப்பட்டு தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

இதனிடையே, முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள பொலிசார், இது பயங்கரவாத செயலாக கருத முடியாது என குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலை முன்னெடுத்த மாணவன் கைது செய்யப்பட்டு, தற்போது செயிண்ட்-ஜீன்-டி-லூஸ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக் கைதியாக உள்ளான்.

சுமார் 1,000 மாணவர்கள் பயிலும் அந்தப் பாடசாலையில் எதிர்பாராதவகையில் நடந்த அந்த சம்பவத்தை அடுத்து, மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி சுமார் 11.30 மணியளவில் குறித்த தாக்குதல்தாரி மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு