கைக்குழந்தையுடன் கஞ்சா கடத்திய பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது!

ஆசிரியர் - Editor I
கைக்குழந்தையுடன் கஞ்சா கடத்திய பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது!

கைக்குழந்தையுடன் கஞ்சா கடத்திற குற்றச்சாட்டில் இளம் தாய் ஒருவர் முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் நேற்று விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, சிலாவத்தைப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றில் வைத்து குறித்த இளம் தாய் தனது கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் தாய், கிளிநொச்சியில் கஞ்சாவைப் பெற்று, கொக்கிளாய்க்கு கொண்டுசெல்லவிருந்த நிலையிலேயே 

சிலாவத்தை பேருந்து தரிப்பிடத்தில்வைத்து அவரது கைக்குழந்தையுடன் கைதுசெய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

அவரின் உடமையிலிருந்து 100கிராம் அளவிலான கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு