சாரதியை தாக்கி 55 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை திருடிய இருவர் மற்றும் அதனை விற்க முயன்ற ஒருவர் உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
சாரதியை தாக்கி 55 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை திருடிய இருவர் மற்றும் அதனை விற்க முயன்ற ஒருவர் உட்பட 3 பேர் கைது!

சாரதியை தாக்கி விட்டு 55 லட்சம் ரூபாய் பெருமதியான கார் ஒன்றையும் 71 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருள் ஒன்றையும் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நிவிதிகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இரத்தினபுரி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இரத்தினபுரி மற்றும் கடுவெல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்தனர்.

திருடப்பட்ட காரை பிரித்து விற்பனைக்கு தயார்படுத்தியிருந்த நிலையில் மற்றுமொரு சந்தேக நபருடன் மல்சிறிபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26 மற்றும் 37 வயதுடைய கடுவெல, இரத்தினபுரி மற்றும் மல்சிறிபுர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு