திருமணமான 3 நாட்களில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் பலி!! -மாமியார் வீட்டு விருந்துக்கு சென்ற போது சம்பவம்-

ஆசிரியர் - Editor II
திருமணமான 3 நாட்களில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் பலி!! -மாமியார் வீட்டு விருந்துக்கு சென்ற போது சம்பவம்-

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் புதிதாக திருமணம் செய்த ஜோடி வீதி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

குறித்த மாநிலத்தின் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்த பினு (வயது 27) என்பவருக்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரணிதா (வயது 22) என்ற பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தனது மாமியார் வீட்டிற்கு விருந்துக்காக மனைவியை இருசக்கர வாகனத்தில் பினு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த உளவு இயந்திரம் மீது அவர்கள் சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

கொலந்தரா என்ற பகுதியில் நடந்த இந்த கோர விபத்தில் புதுமணத் தம்பதி தூக்கி வீசப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய உளவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான மூன்றே நாட்களில் புதுமணத் தம்பதி சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு