வைத்தியசாலை வர முடியாமல் வலியில் துடித்த கர்ப்பிணி பெண்!! -வாட்ஸ்அப் அழைப்பில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்-

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலை வர முடியாமல் வலியில் துடித்த கர்ப்பிணி பெண்!! -வாட்ஸ்அப் அழைப்பில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்-

காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக தொலைதூர கிராமத்தில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு, வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவர்கள் உதவி செய்த சம்பவம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

காஷ்மீர் பிரிவில் உள்ள பெண்ணின் சொந்த கிராமமான கெரான், தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையால், அப்பெண்ணுக்கு பாதுகாப்பாக பிரசம் செய்யம் மாற்று வழியை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, தெழில்நுட்பம் வழியை அமைத்துக்கொடுத்தது.

கெரான் வசதியிலுள்ள மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு க்ரால்போரா மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் பர்வைஸ் வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் பிரசவம் பார்க்க வழிகாட்டினார்.

அதன்படி, 6 மணி நேரத்திற்குப் பின் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு