ஆதாரம் இல்லாமல் பழ.நெடுமாறன் கூறமாட்டார்!! -பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்கிறார் முத்தரசன்-

ஆசிரியர் - Editor II
ஆதாரம் இல்லாமல் பழ.நெடுமாறன் கூறமாட்டார்!! -பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்கிறார் முத்தரசன்-

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று திங்கட்கிழமை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். 

அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு