மனைவியை கொலை செய்து புதைத்த கணவர்!! -காணவில்லை என்று நடாகம் அடியதை கண்டுபிடித்து கைது செய்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
மனைவியை கொலை செய்து புதைத்த கணவர்!! -காணவில்லை என்று நடாகம் அடியதை கண்டுபிடித்து கைது செய்த பொலிஸ்-

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் பரன்வால் என்ற நபர் கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த விசாரணையின் மனிஷ் தன் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது.

மனைவியை கொலை செய்த அந்த நபர், தனது நண்பரின் வீட்டில் புதைத்துள்ளார். பொலிஸார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை அவர் ஒப்புக் கொண்டார்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். மனீஷ் கைது செய்யப்பட்டார்.

பெண்ணின் உடல் பாகங்களை உடல் கூற்று பரிசோதனை அனுப்ப உள்ளதாகவும், மேலும் கொலையில் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு