இடிபாடுகளுக்கு மத்தியில் சாவை எதிர்த்து போராடிய 2 மாத பச்சிளம் குழந்தை!! -128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட அதிஸ்டம்-

ஆசிரியர் - Editor II
இடிபாடுகளுக்கு மத்தியில் சாவை எதிர்த்து போராடிய 2 மாத பச்சிளம் குழந்தை!! -128 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்ட அதிஸ்டம்-

துருக்கியில் 128 மணி நேரத்துக்குப் பின்னர் கட்டட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது.

துர்க்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு 140 மணி நேரத்திற்கும் மேலாக, 28,000ற்க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த பேரழிவின் சோகத்திற்க்கு மத்தியில், சில அதிசயமான உயிர்பிழைப்பு கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன

முன்னதாக, இடிபாடுகளுக்கும் பிறந்த குழந்தை, பிறந்து 10 நாளே ஆன குழந்தை, 7 மாத குழந்தை, 13 வயது சிறுமி மற்றும் 27 வயது இளைஞன் என மீட்புப் படையினர் பேரழிவிலும் உயிர்பிழைத்த பலரை இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டனர்.

இப்போது, துருக்கியின் ஹதய் என்ற இடத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த 2 மாத குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேரத்திற்கு பின் குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிந்து தரைமட்டமான சுற்றுப்புறங்களில், உறைய வைக்கும் வானிலை இருந்தபோதிலும், உயிருடன் மீட்கப்படுவேம் என்ற நம்பிக்கையில் இடிபாடுகளுக்குள் இன்னும் சவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் உயிர்களை மீட்க கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு