பொலிஸார் என்னை திட்டமிட்டு பழிவாங்குகிறர்கள்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்க தலைவி குற்றச்சாட்டு...

ஆசிரியர் - Editor I
பொலிஸார் என்னை திட்டமிட்டு பழிவாங்குகிறர்கள்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்க தலைவி குற்றச்சாட்டு...

திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கி தான் வீட்டில் இல்லாத சமயம் தனது மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததுடன், தனது வீட்டுக்குள் பொலிஸார் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்த ஆவணங்களை பரிசோதித்ததாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில், சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறையை நிறுத்த கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த கிழக்கு நோக்கி என்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சமயத்தில் 

கடந்த 6 ஆம் திகதி  எனது மகன் வீடு ஒன்றை உடைத்து வீட்டினுள் களவாட சென்றதாக தெரிவித்து மகனை தேடி வீடு புகுந்து பொலிசார் தேடிவருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து போராட்டத்தில் இருந்து முல்லைதீவுக்கு வருகைதந்தேன்.

எனது இரண்டாவது மகன் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராக காணப்படுவதோடு அவர் வேறு நபர்களின் தூண்டுதல்களுக்கு உள்ளாக கூடிய நிலைமை இருக்கின்ற நிலையில்  சமயம் பார்த்து வீட்டில் நான் இல்லை என அறிந்து அரச புலனாய்வாளர்கள் 

மற்றும் பொலிசாரின் திட்டமிட்ட செயலாக அருகில் இருந்த வீடு ஒன்றுக்குள் செல்லுமாறு பணித்து வீடு புகுந்து களவு எடுத்ததாக ஒரு வழக்கை பொலிஸார் தொடர்ந்துள்ளனர்.  தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிக்குள் 

தன்னுடைய மகன் அத்து மீறி நுழைந்ததாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் அந்த வீட்டுக்காரர் முறைப்பாடு செய்ததாக தெரிவித்து மகனை காணவில்லை எனவும் மகனை தேடுவதாக தெரிவித்து நான் வீட்டில் இல்லாத நேரம் 

 15 வரையான பொலிசார் தனது வீட்டுக்கு வந்து வீட்டிலிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினுடைய விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் பார்வையிட்டு சோதனையிட்டுள்ளனர்.

பல்வேறு தடவைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பொலிசார் எச்சரித்திருந்ததும் அதனை மீறி நான் போராட்டத்தில் ஈடுபட்டதால் பழிவாங்கும் நோக்கில் பொலிசார், புலனாய்வாளர்கள் இணைந்து 

நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இவ்வாறான நிலையில் மகனை யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துவிட்டு நேற்று 9 காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அழைத்து வந்தேன்.

முறைப்பாடு செய்ததாக தெரிவித்த வீட்டில் உரிமையாளர்களும் இது ஒரு பிரச்சனை இல்லை எனவும் மகனை காணவில்லை ஏதாவது செய்தாலும் என்ற பயத்தினாலேயே தாம் பொலிசில் தெரிவித்ததாகவும், 

அதை சமரசமாக முடிப்பதாகவும் தெரிவித்தும் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற மகனை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக காலை வேளையிலே (8.40) மகனை கைது செய்திருந்தபோதும் 

மாலை 3 மணி வரை கைது செய்தமைக்காக வழங்கப்படும் பத்திரத்தை கூட பொலிசார் வழங்கவில்லை எனவும் தான் சண்டையிட்டு அந்த பத்திரத்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னை பழி வாங்குவதற்காகவே 

திட்டமிட்டு பொலிசார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் காலையில் மகன் பொலிஸ் நிலையம் சென்றும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது பொலிசில் தடுத்து வைத்திருப்பதாகவும் 

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்ச்சியாக நீங்கள் போராட்டங்களுக்கு நிதிகளுக்காக செல்கின்றீர்கள் உங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகின்றது. 

என பல்வேறு வகைகளில் தன்னை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்ததாகவும், தாங்கள் ஏதாவது தற்கொலை முயற்சிகள் செய்தால் கூட இவர்களுடைய அழுத்தங்களும் இவருடைய தாக்கத்தினாலே தாங்கள் இந்த முடிவை எடுக்க நேரிடும் எனவும் 

மனித உரிமை சார்ந்த மற்றும் இலங்கையில் உள்ள தூதரகங்கள் அனைவரையும் இந்த விடயத்தில் உடனடியாக தொடர்பு கொண்டு தனக்கு நீதி பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறும் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் 

கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு