பொங்கு தமிழ் பிரகடனம் வேண்டாமாம்! தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டவேண்டும், யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் காட்டம்...

ஆசிரியர் - Editor I
பொங்கு தமிழ் பிரகடனம் வேண்டாமாம்! தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டவேண்டும், யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் காட்டம்...

பொங்குதமிழ் பிரகடனம் வேண்டாம் 13ம் திருத்தத்தை பேசுங்கள் என கூறி தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை குழப்புவோருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டவேண்டும் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து மாணவர்கள் ஒழுங்கமைக்கும் போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனர். 

இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், 

யாழ்.பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தை சுதந்திர தினத்தன்று முன்னெடுக்க உள்ளோம்.

எமது கோரிக்கையாக தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தினை பொங்கு தமிழ் பிரகடனத்தின் வழி நின்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு வரை பேரணியாகச் செல்லவுள்ளோம்.

எமது பேரணிக்கு தமிழ்தேசிய கட்சிகள் பல பூரண ஆதரவை வழங்கியுள்ள நிலையில் சிவில் சமூகம் வர்த்தக சங்கங்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் 13 வது திருத்தத்தை நிராகரிக்கிறோம் 

என எமது பேரணியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எம்மிடம் முன் வைக்கிறார். தமிழ் மக்கள் 13வது அரசியல் தீர்வாக ஏற்கப்பட முடியாதது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தியாயிற்று. 

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அந்த தெளிவுபடுத்தலை ஏற்கனவே செய்திருக்கின்றது. நாம் வடக்கிலிருந்து கிழக்கு வரை சென்று அரசியல் கட்சிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து 

எமது போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினோம். அவர்கள் பூரண ஆதரவை தந்தார்கள். எமது பேரணியானது பொங்கு தமிழ் பிரகடனத்தின் பிரகாரம் சுயநிர்ணய உரிமை, மரபுவழி தாயகம்,

தமிழ்தேசியம் மக்களின் எதிர்பார்ப்பு அதையே நாம் முன்னிலைப்படுத்துகிறோம். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக 13 வது திருத்தத்தை நிராகரிக்கிறோம் என பேரணியில் காட்சிப்படுத்த வேண்டும்.

என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நிபந்தனை விதிப்பது யாரோ ஒரு பகுதியினரின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றவா என்ற சந்தேகம் எழுகிறது.  ஆகவே சில குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக 

வடக்கு கிழக்கு மக்கள் பேரணியை புறக்கணிப்போருக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு