இரு கோஷ்டிகளுக்கிடையே மோதல், இருவர் கொலை செய்யப்பட்டனர்! மேலும் இருவர் படுகாயம், அதிலொருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
இரு கோஷ்டிகளுக்கிடையே மோதல், இருவர் கொலை செய்யப்பட்டனர்! மேலும் இருவர் படுகாயம், அதிலொருவர் ஆபத்தான நிலையில்..

இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

மேற்படி சம்பவம் திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. புல்மோட்டை - பாலம்குளம் பகுதியிலே மேற்படி கோஷ்டி மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின்போது சலீம் மற்றும் வதூத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர். சுபைர் மற்றும் ஹஸன் ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும். 

புல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹஸன் என்பவரின் உடல் நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு