வீழ்ந்தது இங்கிலாந்து!! -ஜூனியர் மகளிர் உலகக்கோப்பையை வென்றது இந்தியா-

ஆசிரியர் - Editor II
வீழ்ந்தது இங்கிலாந்து!! -ஜூனியர் மகளிர் உலகக்கோப்பையை வென்றது இந்தியா-

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதியது. 

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது செய்தது. 

இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ஓட்டங்களை எடுத்தார். 

ஏனைய வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 17.1 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ஓட்டங்களை எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 69 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ஆரம்பத்தில் அதிரடி காட்டிய அணித்தலைவி ஷபாலி வர்மா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஸ்வேதா செஹராவத் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சௌமியா திவாரி -கோங்காடி த்ரிஷா ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

இறுதியாக 3 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், கோங்காடி த்ரிஷா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 69 ஓட்டங்களை பெற்று ஜூனியர் உலக கோப்பையை ருசித்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு