பேஸ்புகில் மலர்ந்த காதல்!! -இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்-

ஆசிரியர் - Editor II
பேஸ்புகில் மலர்ந்த காதல்!! -இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்-

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகப்புத்தக நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்துள்ளமை இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கிறிஸ்டன் லிபர்ட் என்ற ஸ்வீடன் நாட்டு பெண்  2012 ஆம் ஆண்டு முகப்புத்தகத்தில் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்ற நபரை சந்தித்துள்ளார்.

இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர், இதற்காக ஸ்வீடன் நாட்டு பெண்ணான கிறிஸ்டன் லிபர்ட் இந்தியாவுக்கு பறந்து வந்துள்ளார்.

சிறப்பாக நடைபெற்ற திருமணம்

இந்நிலையில் வெள்ளிக்கிழமை உத்திரபிரதேச மாநிலத்தின் எட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்து முறைப்படி இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு