சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் பலி

ஆசிரியர் - Admin
சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் பலி

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..

கடந்த 21ஆம் திகதி அதிகாலை நேரம் 1.30 மணியளவில் மெர்சிடிஸ் ரக கார் ஒன்று பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றும் பலத்த காயங்களுக்குள்ளான தந்தை நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் அதே குடும்பதை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.அந்த காரில் பயணித்த இரண்டு மகள்களும், தாயாரும் சிறிய பாதிப்படைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குடிபோதை அல்லது போதைப் பொருளினால் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் குடும்பமொன்றே இவ் விபத்தில் சிக்கியது.

St.Gallen கான்டனில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களில் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு