ஸ்பெயினில் மோசடியில் ஈடுபட்ட பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்!!

ஆசிரியர் - Editor II
ஸ்பெயினில் மோசடியில் ஈடுபட்ட பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்!!

பிரித்தானியப் பெண் ஒருவரும், அவரது சகோதரரும் இணைந்து ஸ்பெயின் நாட்டில் வித்தியாசமான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

எசெக்சில் பிறந்தவரான லாரா என்னும் பெண்ணும், அவரது சகோதரரான மார்க்கும் ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான மஜோர்கா தீவிலுள்ள ஹொட்டல்களுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளை வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

அதாவது, குறித்த தீவிலுள்ள ஹொட்டல்களில் தங்கும் சுற்றுலாப்பயணிகளிடம், அவர்கள் அந்த ஹொட்டல்களில் தங்கியிருக்கும்போது உணவு விஷம் என்னும் பிரச்சினையால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக பொய் சொல்லி ஏமாற்றி, அதை நிரூபிப்பதுபோல போலியான ஆவணங்களைத் தயார் செய்து, அந்த ஹொட்டல்களிடம் இழப்பீடு கோர வைத்துள்ளார்கள் இந்த பெண்ணும் அவரது சகோதரரும்.

இந்த மோசடி குறித்து அதிகாரிகளுக்குத் தெரியவரவே, அவர்கள் லாராவையும் அவரது சகோதரரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த 5 பிரித்தானியர்களையும் கைது செய்தனர்.

லாரா கைது செய்யப்படும்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். லாரா முதலானவர்கள் செய்த மோசடியால் ஹொட்டல் குழுமங்கள் இழந்த தொகை சுமார் 9.5 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு