நாகபாம்புடன் செல்பி எடுத்த போது திடீரென நேர்ந்த விபரீதம்!! -பிறந்தது இளைஞரின் உயிர்-

ஆசிரியர் - Editor II
நாகபாம்புடன் செல்பி எடுத்த போது திடீரென நேர்ந்த விபரீதம்!! -பிறந்தது இளைஞரின் உயிர்-

நாகபாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியாவின் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டா ரெட்டி (வயது 28) என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற போது பேருந்து நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் வித்தை காட்டிக்கொண்டிருந்தார்.

இதனைக்கண்ட மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டார், இதனை பாம்பாட்டியிடம் சொன்ன போது அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

காசு தருவதாக கூறி பாம்பாட்டியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார், அவரும் பணத்திற்காக ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டதுடன், இளைஞரின் கழுத்தில் பாம்பை சுற்றியுள்ளார்.

பாம்புடன் செல்பி எடுத்து விட்டு, கழுத்தில் இருந்து எடுத்த போது திடீரென பாம்பு மணிகண்டாவை கொத்தியது. இதனால் வலியில் துடிதுடித்த மணிகண்டாவை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அங்கு மணிகண்டாவை பரிசோதித்த வைத்தியர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த கந்துகோல் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு