பணத்தாள்களை எண்ணத் தவறிய மணமகன்!! -திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

ஆசிரியர் - Editor II
பணத்தாள்களை எண்ணத் தவறிய மணமகன்!! -திருமணத்தை நிறுத்திய மணப்பெண்-

இந்தியாவில் மணமகன் பணத் தாள்களை எண்ணத் தவறியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் பதிவாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூகாபாத் மாவட்டத்தில் மணமகன் 10 ரூபாய் பணத் தாள்களை சரியாக எண்ணாததால் தனது திருமணத்தை ஒரு பெண் நிறுத்தியுள்ளார்.

திருமண சடங்குகளின் போது போதகர், மணமகனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.

21 வயதான மணமகள் ரீட்டா சிங், இதுபற்றி அறிந்ததும் உடனடியாக மேடையில் இருந்து வெளியேறினார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரச்சினை வரமால் கலைத்தனர்.

மணமகளின் குடும்பத்தினர் சோதனை நடத்த முடிவு செய்து, மணமகனிடம் முப்பது 10 ரூபாய் பணத்தாள்களை எண்ணுவதற்கு கொடுத்தனர், ஆனால் மணமகனால் அதனை சரியாக எண்ணமுடியாமல் தோல்வியடைந்தார். இதையடுத்து, அவர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது.

திருமணம் நடக்கும் நாள் வரை, 23 வயது மணமகன், 'மனநலம் குன்றியவர்' என்பது, தங்களுக்குத் தெரியாது என மணமகள் வீட்டார் தெரிவித்தனர்.

“பொதுவாக திருமணங்கள் நல்ல நம்பிக்கையில் நடக்கும், இடைத்தரகர் நெருங்கிய உறவினர் என்பதால் அவரை நம்பி பையனைச் சந்திக்கவில்லை. 

போதகர் அவரது வினோத நடத்தை குறித்து எங்களிடம் கூறியதும், சோதனை நடத்த முடிவு செய்து முப்பது 10 ரூபாய் பணத்தாள்களை கொடுத்தோம், அவரால் எண்ணிக் கொள்ள முடியவில்லை. அவரது உடல்நிலை பற்றி அறிந்த பிறகு, ரீட்டா அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்" என்று மணமகளின் சகோதரர் மோஹித் கூறினார்.

மணப்பெண் திருமணத்தை நிறுத்திய பின்னர் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த விடயம் பொலிஸாருக்கு சென்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு