யாழ். கோண்டாவிலில் திறக்கப்பட்ட "பீஸா ஹட்" உணவகத்தை மூட நல்லூர் பிரதேசசபை உத்தரவு!

ஆசிரியர் - Editor I
யாழ். கோண்டாவிலில் திறக்கப்பட்ட

யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு உணவு விற்பனை நிறுவனம் ஒன்றின் கிளையை தற்காலிகமாக மூடுமாறு நல்லூர் பிரதேசசபை பணித்துள்ளது.

குறித்த அசைவ உணவகத்திற்கு முன்பாக சைவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இதனால் குறித்த ஆலய நிர்வாகம் மற்றும் சைவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.

அதேபோல் குறித்த வியாபார நிலையம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதி பத்திரம் ஆகியன பெறப்படவில்லை. 

இந்த விடயம் கடந்த 17ம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய குறித்த உணவு விற்பனை நிலையத்தை தற்காலிகமாக மூடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,

நல்லூர் பிரதேசசபை அறிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு