யாழ்.மாவட்டத்தில் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் பகுதியளவிலும், முழுமையாகவும் நிராகரிப்பு! சுயேட்சை குழுக்களின் அனைத்தும் ஏற்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் பகுதியளவிலும், முழுமையாகவும் நிராகரிப்பு! சுயேட்சை குழுக்களின் அனைத்தும் ஏற்பு...

யாழ்.மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கூறியுள்ளார். 

நேற்று இரவு யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 

யாழ்.மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும், வலிகாமம் கிழக்கு பிரதேசசபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு ஊர்காவற்துறை பிரதேசசபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நவ லங்கா நிதஹஸ் பக்ஷயவின் வேட்புமனு வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை குழுக்களின் எந்த வேட்புமனும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு