கட்டுப்பணத்தை செலுத்திவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மறந்த சுயேட்சை குழு! யாழ்ப்பாணத்தில் நடந்த சுவாரஸ்யம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பணத்தை செலுத்திவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மறந்த சுயேட்சை குழு! யாழ்ப்பாணத்தில் நடந்த சுவாரஸ்யம்..

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாநகரசபையில் மட்டும் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய சுயேட்சை குழு ஒன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மறந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்திருக்கின்றது. 

இதனபின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் 7 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் சில உள்ளூராட்சி மன்றங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 16 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணத்தைச் செலுத்திய நிலையில் 15 சுயேட்சைக் குழுக்கள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். ஒரு சுயேச்சைக் குழு கட்டுப்பனத்தை செலுத்திவிட்டு 

வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு