குழந்தை பெற சாமியார் கூறிய அறிவுரை!! -மனைவியை அகோரி பயிற்சியில் ஈடுபட வைத்த கணவர், மாமியார்-

ஆசிரியர் - Editor II
குழந்தை பெற சாமியார் கூறிய அறிவுரை!! -மனைவியை அகோரி பயிற்சியில் ஈடுபட வைத்த கணவர், மாமியார்-

இந்தியாவின் மகாராஷ்டிராவில் குழந்தை பெறுவதற்காக பெண்ணொருவரை சாமியாரின் அறிவுரையின் பேரில் கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனேவின் சிங்காட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த தனக்கு குழந்தை இல்லாததால், மாமியார் வீட்டில் மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், குழந்தை பெற வேண்டும் என்று தனது கணவர் மற்றும் மாமியார் உள்ளூர் சாமியார் ஒருவரை நாடியுள்ளனர்.

அவர் கூறிய அறிவுரையின்படி, மனித எலும்புகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொடியை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினர். மேலும், மராட்டிய கொங்கன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு தன்னை அழைத்துச் சென்று, ஒரு அருவியின் கீழ் அகோரி பயிற்சியில் ஈடுபட கட்டாயப்படுத்தினர் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 7 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக திருமணம் நடந்தபோது ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள் அடங்கிய வரதட்சணையை கேட்டதாகவும் ஒரு புகாரை அப்பெண் கூறியிருந்தார்.        

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு