15 கட்சிகள், 16 சுயேட்சை குழுக்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தின, 15 வேட்புமனுக்கள் தாக்கல்..

ஆசிரியர் - Editor I
15 கட்சிகள், 16 சுயேட்சை குழுக்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தின, 15 வேட்புமனுக்கள் தாக்கல்..

யாழ்.தேர்தல் தொகுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை வரை 15 வேட்பு மனுக்கள் யாழ்.மாவட்ட செயலக தேர்தல் அலுவலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களுக்கான வேட்பு மனுக்கள் யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலகத்தால் ஏற்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்காக 15 கட்சிகள் 16 சுயேச்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள நிலையில் 366 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நிலையில் 15 வேட்பு மனுக்கள் மட்டுமே பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் அனேகமானவர்கள் இன்றைய தினம் வேட்பு மனுக்களை கையளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு