யாழ்.மாவட்டத்திலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக மாவட்டச் செயலர் - மாவட்ட இராணுவ தளபதி இடையே சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக மாவட்டச் செயலர் - மாவட்ட இராணுவ தளபதி இடையே சந்திப்பு..

யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் - யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட இடையே சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் 

மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் 

ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு