மகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்!! -காதலனுடன் இணைந்து வெறிச் செயல்-

ஆசிரியர் - Editor II
மகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்!! -காதலனுடன் இணைந்து வெறிச் செயல்-

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தாயே தன்னுடைய 3 வயது மகளை கொலை செய்து, காதலனின் உதவியுடன் ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் 3 வயது சிறுமியைக் கொன்று, ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த தாயும், அவரது காதலரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகள் கரணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், பின் காதலர் சன்னியின் (Sunny) உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் சிறுமியின் உடலை போர்த்தி ஸ்ரீ கங்காநகர் ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

அங்கு காலை 6:10 மணிக்கு புறப்பட்ட ரயிலில் ஏறிய தம்பதி, பதுஹி (Fatuhi)ரயில் நிலையத்திற்கு முன் உள்ள கால்வாயில் உடலை வீச முயற்சித்துள்ளனர், ஆனால் உடல் கால்வாயில் விழாமல் ரயில்வே தண்டவாளத்தின் அருகிலேயே விழுந்துள்ளது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக ஸ்ரீ கங்காநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

5 குழந்தைகளுக்கு தாயான சுனிதா தனது இரண்டு குழந்தைகளுடன் தற்போது காதலன் சன்னியுடன் சாஸ்திரி நகரில் வாழ்ந்து வருகிறார்.

சுனிதாவின் மற்ற 3 குழந்தைகள் அவரது கணவருடன் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சிறுமியை அடையாளம் கண்டு தாய் சுனிதா மற்றும் காதலன் சன்னி கைது செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் நடத்திய விசாரணையில் சுனிதா தனது மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் கொலைக்கான காரணத்தை புரிந்து கொள்ள பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு