ஹெரோயின் பாவனைக்கு அடிமையான இளம் குடும்பஸ்த்தர் பலி!

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் பாவனைக்கு அடிமையான இளம் குடும்பஸ்த்தர் பலி!

ஹெரோயின் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தென்மராட்சி - வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். 

இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இவர் யாழ்.சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். 

கடந்த 10ஆம் திகதி வயிற்று வலி காரணமாக யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

எனினும் சிகிச்சை பயனின்றி  நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

தொடர்ச்சியான ஹெரோய்ன் பாவனையே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு