யாழ்.வடமராட்சி - கரணவாயில் ஆசிரியையின் சங்கிலியை அறுத்தவர் தென்மராட்சி - மீசாலையில் சிக்கினார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - கரணவாயில் ஆசிரியையின் சங்கிலியை அறுத்தவர் தென்மராட்சி - மீசாலையில் சிக்கினார்..!

யாழ்.வடமராட்சி - கரணவாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் மீசாலையைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டியும் ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

கைதான சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு