எலி கடித்த உணவுப் பண்டத்தை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர் சிக்கினார்! யாழ்.தென்மராட்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
எலி கடித்த உணவுப் பண்டத்தை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர் சிக்கினார்! யாழ்.தென்மராட்சியில் சம்பவம்..

எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கடந்த புதன் கிழமை மட்டுவில் சரசாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள் சோதனையிடப்பட்டிருந்தது. 

இதன்போது மட்டுவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எலி கடித்த உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த உணவக உரிமையாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வர்த்தக நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு