யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இரகசிய கமரா! அறையில் இருந்தவர்கள் சுதாகரித்துக் கொண்டதால் ஊழியர் கைது, தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இரகசிய கமரா! அறையில் இருந்தவர்கள் சுதாகரித்துக் கொண்டதால் ஊழியர் கைது, தீவிர விசாரணையில் பொலிஸார்..

யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தங்கியிருந்தவர்களை நள்ளிரவு நேரம் இரகசிய கமரா மூலம் படம் பிடித்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த ஹோட்டலில் கடந்த திங்கள் கிழமை இரவு தென்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் வவனியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தங்கியிருந்துள்ளனர். அன்று இரவு 12 மணியளவில், 

அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசிக்கு அருகில் சுவரில் துளையிடப்பட்டிருப்பதையும் அதில் இரகசிய கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளதையும் அறையில் இருந்தவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். 

இதனையடுத்து அறைக்கு வௌியே சடுதியாக வந்தபோது அதே தளத்திலுள்ள இன்னொரு அறையின் கதவு மூடப்படுவதை அவதானித்துள்ளனர். இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

எனினும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். பின்னர் அறையிலிருந்தவர்கள் தர்க்கப்பட்டதை தொடர்ந்து திடீரென மூடப்பட்ட அறையை திறந்து பார்த்தபோது அறையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் இருந்துள்ளார். 

அவருடைய தொலைபேசியை வாங்கி பார்த்தபோது உள்ளே காணொளி இருந்துள்ளது. இதனையடுத்து அறையில் தங்கியிருந்தவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தொிவித்திருக்கின்றனர். 

இதனடிப்படையில் சம்மந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த ஹோட்டலின் அறையினுள் கண்ணாடி வைக்கப்பட்டு அது திரைச்சீலையால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், 

அதன் ஊடாகவும் இரகசியமாக வீடியோ பதிவுகளை பெறமுடியும் நிலைமை காணப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. அது குறித்து பொலிஸார் சோதனையிட்டபோது கண்ணாடியை மறைக்கும் வகையில் வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலில் தம்பதிகளா சென்று அறை வாடகைக்கு எடுக்கும்போது குறிப்பிட்ட சில அறைகள் மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுவதுடன், இவ்வாறான சம்பவம் நீண்ட நாட்களாக நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு