யாழ்.பல்கலைகழகம் முன்பாக மாணவர்கள் கண்டன போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகம் முன்பாக மாணவர்கள் கண்டன போராட்டம்!

வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலைகழகம் முன்பாக இன்று காலை மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் 

தொடர்ச்சியாக நாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு