யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தொிவு ஒத்திவைப்பு! சபையில் கோரம் இல்லை, ஒளிந்துகொண்ட உறுப்பினர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தொிவு ஒத்திவைப்பு! சபையில் கோரம் இல்லை, ஒளிந்துகொண்ட உறுப்பினர்கள்..

யாழ்.மாநகரசபை புதிய முதல்வர் தொிவு சபையில் கோரம் போதாமையினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று காலை 10 மணிக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் புதிய முதல்வர் தொிவுக்கான கூட்டம் இடம்பெற்றது. 

இதன்போது 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.மாநகர சபையை கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.

மாநகர முதல்வர் தெரிவையோட்டி மாநகர சபை வளாகத்தில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

மாநகர சபையின் சபா மண்டபத்தினுள் நுழைகின்ற மாநகர உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் 

அனைவரையும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு