வேலன் சுவாமி சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலை, மேலும் 5 பேரை கைது செய்ய முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I
வேலன் சுவாமி சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலை, மேலும் 5 பேரை கைது செய்ய முஸ்தீபு..

ஐனாதிபதி வருகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வேலன் சுவாமி சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளார்.

ஐனாதிபதிக்கு எதிராக யாழ்.நல்லூர் சுற்றாடலில் இடம்பெற்ற போராட்டத்தின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை கைது செய்யப்பட்ட வேலன் சுவாமியுடன் மேலும் 5 பேர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு