வடமாகாணத்தில் தகுதியான அதிகாரிகள் இல்லையா? போராட்டத்தில் குதிக்கும் இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் தகுதியான அதிகாரிகள் இல்லையா? போராட்டத்தில் குதிக்கும் இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள்..

இ.போ.ச வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் தொடர்பில் ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இ.போ.சபையின் வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளராகக் கடமை ஆற்றிய குணபாலச் செல்வம் டிசம்பர் 31-ஆம் திகதியுடன் பணி ஓய்வு பெற்று சென்ற நிலையில் அவருடைய இடத்துக்கு எவரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இ.போ.ச கொழும்புத் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை தற்காலிக பிரதிப் பொது முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வடமாகாணத்தில் பல மூத்த அதிகாரிகள் இருக்கும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டிய தேவையில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே தமது கருத்துக்களை செவிமடுக்காது கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவர் வடக்குக்குத் தலைமை அலுவலகத்திற்கு வருவாராயின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு