திருடிய குற்றம்!! -4 பேர் கையை துண்டித்த தலிபான்கள்-

ஆசிரியர் - Editor II
திருடிய குற்றம்!! -4 பேர் கையை துண்டித்த தலிபான்கள்-

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடூர ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர். 

மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அண்மையில் அறிவித்தனர். 

இந்தநிலையில் திருடிய குற்றத்துக்காக 4 பேரின் கைகளை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்தனர். 

அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது. பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர் தாலிபான்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு