யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்திரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்திரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கிறார்!

யாழ்.மாவட்டச் செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். 

நேற்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் நியமன கடிதத்தினை பெற்றுக்கொண்ட அவர் இன்று பதவியேற்கவுள்ளார். 

யாழ்.மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று (16) அமைச்சரவை வழங்கியுள்ளது.

இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 

2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடமாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக,

மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு