பொங்குதமிழ் பிரகடனத்தின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் அனுட்டிப்பு!

ஆசிரியர் - Editor I
பொங்குதமிழ் பிரகடனத்தின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் அனுட்டிப்பு!

யாழ்.பல்கலைக்கழக பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர்.

இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, 

மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடணமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு