பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காவலாளி சடலமாக மீட்பு!

பாடசாலை விளையாட்டு மைதான காவலாளியான 27 வயதான இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை கண்டியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் இடம்பெற்றிருக்கின்றது. 

இன்று மைதானத்துக்கு வந்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் சடலம் ஒன்று மைதானத்தில் காணப்பட்டதனையடுத்து 

அது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். தும்மோதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய உபுல் சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு