யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்கியிருந்த நாக பாம்பு திருட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்கியிருந்த நாக பாம்பு திருட்டு!

யாழ்.மிருசுவில் - தவசிகுளம் கண்ணகை அம்மன் ஆலயத்தில் தங்கியிருந்த நாக பாம்பை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். 

மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்றுள்ளார் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு