யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

தன்னிச்சையான வரித்திருத்தம் மற்றும் மருத்து தடடுப்பாடு ஆகியவற்றுக்கு தீர்வுகோரி யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று செவ்வாய்க்கிழமை(17) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத்துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், 

வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநகள், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வை தர முன்வரவேண்டுமென போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு