ஜல்லிக்கட்டில் காளை குத்தி இளைஞர் பலி!! -கதறும் தாய்-

ஆசிரியர் - Editor II
ஜல்லிக்கட்டில் காளை குத்தி இளைஞர் பலி!! -கதறும் தாய்-

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி 3 ஆவது இடத்தில் இருந்த இளைஞர் காளை முட்டியதில் உயிரிழந்துள்ளர்.

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று நடந்தது. இந்த போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார்.

ராஜேந்திரன் - தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு காளைகளை அடக்கி சிறந்த வீரராக திகழ்ந்தவர்.

இந்த நிலையில் வாடிவாசலில் அரவிந்த்ராஜ் காத்திருந்த போது திடீரென திடீரென ஆக்ரோஷத்துடன் வெளிவந்த காளை அவரின் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதையடுத்து படுகாயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்ட பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்திற்கு 3 இலட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மகனின் இறப்பு குறித்து தாய் தெய்வானை கூறுகையில், இதோ வந்துவிடுகிறேன் அம்மா என கூறி சென்ற எனது மகன் இறந்து போயுள்ளான். திருமண ஏற்பாட்டிற்கு சரி என்று சொன்னவன் சடலமாக ஆகிவிட்டான் என கண்ணீருடன் பேசியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு