யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை!

காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை, 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என சொல்லுகின்றார்கள்.

உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள் ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை, அதனால் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாக 

எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு